Site icon Tamil News

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

2023 இல் இதுவரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து உக்ரைனுக்கான 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி உக்ரைனுக்கு 6 பில்லியன் யூரோக்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன்டர் லயன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உக்ரைனுக்கு எங்கள் வருடாந்திர மேக்ரோ-நிதி உதவி தொகுப்பின் கீழ் மற்றொரு 1.5 பில்லியன் யூரோக்களை வழங்குகிறோம் எனத் தெரிவித்த அவர்,  ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கவும், அதன் நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்பை இயக்கவும், முக்கியமான சீர்திருத்தங்களை நடத்தவும் உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து உதவுவோம். என்று உறுதியளித்தார்.

Exit mobile version