Site icon Tamil News

எந்த நேரமும் அணுவாயுதங்களைப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருக்கும் வடகொரியா

வடகொரியாஅணுவாயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக இருக்கவேண்டும் என்று அந்நாட்டுத் தலைவர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

போரைத் தவிர்க்க எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான KCNA அதைத் தெரிவித்தது.

நேற்று, வடகொரியா பாவனை அணுக்குண்டு ஒன்றை ஏந்தியிருந்த ஏவுகணையைப் பாய்ச்சியது.

அந்தக் குறுந்தொலைவுப் புவியீர்ப்பு ஏவுகணை கிழக்குக் கடலில் விழுந்தது.

தனது தாக்கும் திறன்களை மெருகூட்ட அந்த அணுவாற்றல் உத்திபூர்வப் பயிற்சியை மேற்கொண்டதாக வட கொரியா கூறியது.

கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்ட அமெரிக்காவுக்கும் தென்கொரியாவுக்கும் அதன் முலம் எச்சரிக்கை விடுப்பதாக வடகொரியா கூறியது.

Exit mobile version