Site icon Tamil News

உக்ரைன் ஏவிய ஏவுகணையை சுட்டு வீழ்த்திய ரஷ்யா!

உக்ரைனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த ஏவுகணை ரிசார்ட் நகரமான ஃபியோடோசியா மீது சுட்டு வீழ்த்தப்பட்டதாக கிரிமியாவிற்கான ரஷ்ய தலைவர் தெரிவித்தள்ளார்.

இந்த ஏவுகணை தாக்குதலால் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியா பகுதியை ரஷ்யா இணைத்துக்கொண்டது. இந்த விவகாரம் சர்வதேச கண்டத்திற்கு உள்ளது.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற போரில் இந்த பகுதியை மீட்கப்போவதாக உக்ரைன் சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version