ஈஃபிள் கோபுரத்தில் உலகில் மிக உயரமான சறுக்கு விளையாட்டு அமைக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஈஃபிள் கோபுரத்தின் உச்சியில் இருந்து 300 மீற்றர் உயரத்தில் இது அமைக்கப்பட உள்ளது.
இக்கோடை காலத்தில் அதிகளவு சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் இந்த நீர்ச்சறுக்கு விளையாட்டு உருவாக்கப்பட உள்ளது.
ஜூலை மாதம் முதலாம் திகதியில் இந்த சறுக்கு விளையாட்டு பயன்பாட்டுக்கு வரும் எனவும் நேற்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சமூகவலைத்தளத்தில் பெரும் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. ஈஃபிள் கோபுர நிர்வாகிகளால் மிகத்திறமையாக ‘முட்டாள்கள் நாள் (April Fool) கொண்டாடப்படுவதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.