Site icon Tamil News

இஸ்ரேலுக்கு எதிராக பிரிட்டனில் பாரிய மக்கள் போராட்டம்

பிரிட்டனில் இஸ்ரேல் அமைத்துள்ள ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இழுத்து மூடக்கோரி நாடு தழுவிய பேரணிகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது சமீபகாலங்களில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ராணுவத்தின் அட்டூழியங்களைக் கண்டித்தும் பேரணிகளில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்

அத்துடன் குறித்த ஆயுத  தொழிற்சாலைகளை உடனடியாக இழுத்து மூடாவிட்டால், தொழிற்சாலையை  மக்களே நேரடி நடவடிக்கை மூலமாக மூடுவார்கள் என்றும் போராட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

மே 1 ஆம் திகதி வரையில் மக்கள்  காத்திருப்பார்கள் என்றும், அதன் பிறகும் தொழிற்சாலை இயங்கினால் மக்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளதுடன்,

நாடு முழுவதுமிருந்து மக்கள் திரட்டப்பட்டு, மூடுவிழா நடத்துவோம் என்று அவர்கள் விடுத்துள்ள அறிவிக்கையில் தெரிவித்துள்ளனர்

 

Exit mobile version