Site icon Tamil News

இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த யாழ்ப்பாண இளைஞர்களுக்கு விளக்கமறியல்

கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா நாட்டுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக சட்டவிரோதமான முறையில் ஏறிய நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் பிரேமரத்ன திராணகம உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த பனாமா கொடியுடன் கூடிய சரக்கு கப்பலில் சட்டவிரோதமாக ஏறிய நான்கு இலங்கையர்கள், பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தனர்.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் மார்ச் மாதம் 24 ஆம் திகதி குறித்த குழுவினர் கப்பலில் ஏறியுள்ளனர்.

கப்பல் சூயஸ் கால்வாயை நெருங்கிக் கொண்டிருந்தபோது, குழுவைப் பற்றி கேப்டனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

கப்பல் வழித்தடத்திற்கு அறிவித்த பின்னர், குழுவினர் கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு இலங்கை செல்லும் கப்பலில் திருப்பி அனுப்பப்பட்டனர்.

Exit mobile version