Site icon Tamil News

இலங்கையில் வீடொன்றுக்குள் பெண்கள் செய்த அதிர்ச்சி- சுற்றிவளைத்த பொலிஸார்

கடுகன்னாவ, கந்தகம பிரதேசத்தில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து தேங்காய் விற்கும் போர்வையில் பாரிய அளவில் போதை வஸ்து விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாதாள உலக கோஷ்டியினர் என சந்தேகிக்கப்படும் மூன்று பெண்கள் உட்பட 5 பேரை கடுகன்னாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்த போது சந்தேக நபர்களிடம் இருந்து 33 கைத்தொலை பேசிகள், 3 வேன்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 9 வாகனங்களுக்கான வருமானம் மற்றும் காப்புறுதி பத்திரங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

ஈ-கேஷ் மூலம் போதை வஸ்து விநியோகிக்கும் இந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட வீட்டை 25000 ரூபாவுக்கு வாடகைக்கு எடுத்து போதை வஸ்து வர்த்தகத்தை மேற்கொண்டு வந்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 5340 மில்லிகிராம் போதை வஸ்தையும் 62800 ரூபா பணத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர் .

பொலிசார் சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version