Site icon Tamil News

இலங்கையில் உள்ள குரங்குகளை கேட்டுகும் சீனா

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

முதற்கட்டமாக இலங்கையில் இருந்து 100,000 குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது.

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

லங்கையின் குரங்குகளை வெளிநாடு ஒன்றுக்கு வழங்கும் போது நடைமுறையில் உள்ள சட்ட நிலைமைகள் சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவையின் அனுமதியுடன் குழு ஒன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் விவசாய அமைச்சு, விலங்கியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவை உடனடியாக நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட உள்ளது. இலங்கையில் 30 இலட்சத்தை அண்மித்த குரங்குகள் இருப்பதாகவும், விவசாய பயிர்களை சேதப்படுத்தும் முதன்மையான விலங்காக குரங்கு  இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

 

Exit mobile version