Site icon Tamil News

இலங்கையில் அதிர்ச்சி – காதலுடன் செல்வதற்காக சிறுமி செய்த அதிர்ச்சி செயல்

வெயங்கொட பிரதேசத்தில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தாக்கி விட்டு சிறுமி ஒருவர் காதலனுடன் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 15 வயதான சிறுமி  தொடர்பில்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தனது தாயை கொடூரமாகத் தாக்கியுள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் இதற்கும் முன்னர் ஒரு காதலனுடன் வீட்டை விட்டுச் சென்று ஒரு சில தினங்களின் பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்ததாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி  காதல் ஜோடியை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

Exit mobile version