Site icon Tamil News

இந்தியா வந்த பூட்டான் மன்னர்

பூடான் மன்னர் ஜிக்மே வான்சுக் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் அழைப்பின் படி. புதுடில்லி விமான நிலையத்தில் பூடான் மன்னரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெயசங்கர் வரவேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூடான் மன்னரின் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் தனித்துவமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என இந்திய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பூடான் மன்னருடன், வெளியுறவு அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகள் குழுவும் இந்தியா வந்துள்ளனர்.

இந்திய விஜயத்தின் போது, ​​பூடான் மன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

Exit mobile version