தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் புதன்கிழமை பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 8 பேர் உயிரிழந்திருக்கலாம் மற்றும் 16 பேர் காயமடைந்தனர், அவர்களில் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு தென்மேற்கே 80 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பட்டாசுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் திடீரென தீப்பிடித்து எரிந்த போது இந்த வெடி விபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மேலும் 3 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, காயமடைந்தவர்களில் 13 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், 3 பேர் சென்னையில் உள்ள இரண்டு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.