Site icon Tamil News

ஆஃப்ரிக்காவில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனு மாகாணம் உமோகிடி என்ற கிராமத்துக்குள் நேற்று மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பத்தினால்,   பொதுமக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கும், இங்கும் ஓடியதுடன், புதருக்குள் ஒளிந்துக்கொண்டனர்.

இந்த கொடூர சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனக்  கூறப்படுகிறது.

Exit mobile version