Site icon Tamil News

அத்தியாவசியப் பொருள்களை தடுப்பதாக இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

 

உணவும் மருத்துவப் பொருள்களும் செல்வதை இஸ்ரேலிய ராணுவம் தடுப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

மேற்குக் கரையில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குள் உணவும் மருத்துவப் பொருள்களும் செல்வது தடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தப் பகுதியில் எட்டாவது நாளாக இஸ்ரேலிய ராணுவம் அதிரடிச் சோதனைகளை நடத்துகிறது.

காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து அதுவே அந்தப் பகுதியில் நடத்தப்பட்டிருக்கும் ஆகக் கடுமையான படையெடுப்பில்

30க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலிய மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவதைத் தடுக்கச் சோதனைகள் நடத்தப்படுவதாய் ராணுவம் கூறியது.

படையெடுப்பு எப்போது முடியும் என்பதற்கான விவரங்கள் இல்லை.

Exit mobile version