Site icon Tamil News

அணித்திரட்டல் உத்தரவுகளில் கையொப்பமிடாவிட்டால், டிப்ளோமாக்கள் மறுக்கப்படும் : ரஷ்ய மாணவர்களுக்கு எச்சரிக்கை!

ரஷ்யாவின் உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் ஒன்றில் மாணவர்கள் அணித்திரட்டல் உத்தரவுகளில் கையொப்பமிடாத பட்சத்தில் அவர்களின் டிப்ளோமாக்கள் மறுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்படி மொஸ்கோ ஏவியேஷன் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து வருங்கால பட்டதாரிகள், இராணுவத்தில் சேர ஒப்புக்கொள்ளும் வரை தங்கள் சான்றிதழ்களில் கையொப்பமிடுவதில்லை எனக் கூறியுள்ளனர்.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பரந்த அணிதிரட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக நம்பப்படுகிறது. இது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை இராணுவத்திற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version