Site icon Tamil News

பிலிப்பைன்ஸ் தீ விபத்துக்கு உள்ளான கப்பல் : 31 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு நோக்கி பயணித்த கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில், மூன்று குழந்தைகள் உள்ளபட 31 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏழு பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கப்பலில்  250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ள நிலையில், 230 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version