Site icon Tamil News

பாடசாலைக்குள் திடீரென வீசிய துர்நாற்றம்.. உடல் நலம் பாதிக்கப்பட்ட 9 மாணவர்கள்!

ஜப்பானின் ஹோன்சு தீவில் உள்ள ஹரேஷிமா நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பள்ளிக்கூடத்தில் திடீரென கடும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அசவுகரியமாக உணர்ந்துள்ளனர்.

துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என பள்ளி ஊழியர்கள் சோதனை செய்து கொண்டிருந்தபோதே, மாணவர்கள் சிலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டன.

அதனை தொடர்ந்து இந்த துர்நாற்றத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் அருகில் உள்ள வைத்தியசாலையில் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்கள் நலமாக இருப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version