Site icon Tamil News

தேனிலவுக்காக கிரீஸ் சென்ற தம்பதிக்கு நேர்ந்த துயரம்

கிரீஸுக்குத் தேனிலவுக்குச் சென்றிருந்த புதுமணத் தம்பதி வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த அவர்கள் இருந்த வீடு வெள்ளத்தில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அந்தச் சம்பவம் இம்மாதம் 6ஆம் தேதி பொடிஸ்டிகா (Potistika) உல்லாசத்தலத்தில் நேர்ந்தது.

அப்போது கிரீஸ் டேனியல் (Daniel) புயலால் பாதிக்கப்பட்டிருந்தது. கனத்த மழை பெய்ததால் தம்பதி தேன்நிலவுக்காக வாடகைக்கு எடுத்திருந்த பங்களா வீட்டிலேயே இருக்க முடிவெடுத்ததாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

அவரும் மற்ற விருந்தாளிகளும் உயரமான பகுதிக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார். தம்பதியை அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தியதாக உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

மரபணுச் சோதனைகள் மூலம் அவர்களின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆஸ்திரியாவின் வெளியுறவு அமைச்சு கூறியது.

அவர்களின் குடும்பத்தாருக்கு அமைச்சு அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.

Exit mobile version