Site icon Tamil News

தமிழகம் வரும் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 8ம் தேதி தமிழகம் வருகிறார். தமிழகத்தில் 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரெயில்வே திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கி உள்ளார்.

குறிப்பாக, சென்னை-கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில், தாம்பரம்-செங்கோட்டை ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

நாட்டின் அதிவேக ரெயிலான வந்தே பாரத் ரெயில் தமிழகத்தில் ஏற்கனவே சென்னை சென்ட்ரல் முதல் மைசூரு வரை இயக்கப்படுகிறது. தற்போது இயக்கப்படும் சென்னை-கோவை வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் இரண்டாவது ரெயில் ஆகும்.

அத்துடன் தமிழகத்திற்குள் இயக்கப்படும் முதல் வந்தே பாரத் ரெயில் இதுவாகும்.

Exit mobile version