Site icon Tamil News

சிறுநீரக பிரச்சனை இருந்தால் சிறுநீரில் தெரியும் அறிகுறிகள் தொடர்பில் அவதானம்

நமது உடலில் பல உறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. நம் உடலின் செயல்பாட்டில் இந்த உறுப்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. உடலில் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு மிக அத்தியாவசியமாக இருக்கும் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்றாகும். சிறுநீரகம் நம் உடலில் மிக முக்கியமான செயல்பாட்டை செய்கிறது. ஆகையால் இதை பாதுகாப்பாக, எந்த வித பிரச்சனையும் ஏற்படாமல் பராமரிப்பது மிக அவசியமாகும்.

சிறுநீரகத்தின் பணி

சிறுநீரகத்தின் பணி இரத்தத்தில் உள்ள அழுக்கு மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றுவது. சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அல்லது சிறுநீரகம் சேதமடைந்தாலோ, வடிகட்டி சரியாக வேலை செய்யாமல், உடலில் உள்ள கழிவுகளை வெளியே அகற்ற முடியாத நிலை ஏற்படலாம்.

சிறுநீரக நோய்

இந்த காலத்தில் சிறுநீரக நோய் மிகவும் பிரபலமாகி வருகிறது, பலர் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நபர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டால், அவருக்கு எப்போதும் சோர்வான உணர்வு இருக்கும். அவருக்கு ஒரு நோயாளியை போன்ற உணர்வு ஏற்படுகின்றது.

சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகள்

சிறுநீரகம் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால், அதனால், பல ஆபத்தான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீரக பிரச்சனைகள் எற்பட்டால், நம் உடல் அதற்கான சில அறிகுறிகளை வெளியிடும். அவற்றை கண்காணிப்பது மிக அவசியம் ஆகும்.

சிறுநீரில் தோன்றும் அறிகுறிகள்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், சிறுநீரில் சில அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள் பற்றிய முழுமையான புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாலும். அவற்றில் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிகுறிகளைக் கண்டால், உடனடியாக மருத்துவரை நாடி, அவரது ஆலோசனை பெற்று, சிகிச்சை எடுத்தால், சிறுநீரக செயலிழப்பிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம்.

சிறுநீரக செயலிழப்பு என்றால் என்ன?

சிறுநீரக செயலிழப்பு என்பது சிறுநீரக நோயின் கடைசி நிலையாகும். இது மிகவும் ஆபத்தான ஒரு நிலை. ஆகையான் இதற்கு முன்னரே, இதற்கான அறிகுறிகளைப் புரிந்துகொண்டு மருத்துவரின் உதவியை பெற்றால், சிறுநீரக செயலிழப்பை தவிர்க்கலாம்.

மேலும் படிக்க | ஓவர் எடையை உடனே குறைக்க காலையில் இதை குடிங்க போதும்

சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள்:

– சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு கண்டிப்பாக சிறுநீர் கழிக்கும் முறையில் மாற்றம் ஏற்படும். இது முதன்மையான அறிகுறியாகும். ஆகையால் இதை யாரும் புறக்கணிக்கக்கூடாது.
– சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரில் துர்நாற்றம் வீசுவதும் ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. சிறுநீரக நோய் ஏற்பட்டால், சிறுநீர் துர்நாற்றம் வீசத் தொடங்குகிறது.
– சிறுநீர் நிறம் மாறி அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. நிற மாற்றமும் சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
– அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டு, நீங்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேர்ந்தால், இதுவும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளை சுட்டிக்காட்டும் அறிகுறி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
– சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
– சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுவதும் ஒரு பொதுவான அறிகுறி.
– சிலருக்கு குறைவான சிறுநீர் போக்கு இருக்கும்.
– சிறுநீரில் நுரை இருப்பதும் இந்த பிரச்சனைக்கான ஒரு அறிகுறியாக உள்ளது.
– சிறுநீரில் நுரை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும். சிறுநீரகம் புரதத்தை வடிகட்ட முடியாதபோது சிறுநீரில் நுரை தோன்றுகிறது.
– இவை தவிர, சிறுநீரக நோய் ஏற்பட்டால், உடலில் வீக்கம், இரத்த அழுத்தம் ஏற்படலாம். வாந்தி போன்ற உணர்வும் ஏற்படும். தோலில் அரிப்பு, சோர்வு, பசியின்மை போன்ற அறிகுறிகளும் இதன் அறிகுறிகளாகும்.

மேலே குறிப்பிடுள்ள அறிகுறிகளில் எது தென்பட்டாலும், அதை அலட்சியம் செய்யாமல், உடனடியான மருத்துவரை அணுகி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது நல்லது.

Exit mobile version