Site icon Tamil News

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தைக் கடந்தது!

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12, 591 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினசரி பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டி இருப்பது கடந்த 8 மாதங்களில் இதுவே முதல் முறையாகும். தினசரி பாதிப்பு விகிதம் 5.46 சதவீதமாகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 5.32 சதவீதமாகவும் உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 57 ஆயிரத்து 992 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 10, 827 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 61 ஆயிரத்து 476 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65286 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றை விட 1724 அதிகமாகும்.

Exit mobile version